Skip to main content

Posts

அரியலூரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்பு..!

 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(43). சவுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பானுமதி(35), மகன்கள் பிரசாத்(13), சாத்விக்(2), மகள் சாத்விகா(2). இதில்,சாத்விக், சாத்விகா ஆகியோர் இரட்டையராகப் பிறந்தவர்கள். இந்நிலையில், ராஜாவின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மீன்சுருட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பானுமதியும், பிரசாத், சாத்விக், சாத்விகா ஆகியோர் தரையிலும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப்பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், உயிரிழந்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம், குழந்தைகள் 3 பேரையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் எஸ்.பி. செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்
Recent posts

திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றும் 4 காவலர்கள் உதவி ஆய்வாளர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 615 உதவி ஆய்வாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டது.  இந்த இந்த துறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றி வரும் 16 ஆயிரத்து 11 காவலர்கள் கலந்துகொண்டு போட்டியின்றி எழுத்து தேர்வு உடல் திறன் தேர்வு நேர்முகத் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது கடந்த மாதம் 30 -ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் நான்கு காவலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் அஜித்குமார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சுரேஷ்.5-வது இடத்தை வென்றார். மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆயுதப்படையில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் கனிராஜா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் சப்இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்...

மத போதகர் கொடுத்த அதிகமான பாலியல் தொல்லை - பொறுக்கமுடியாமல் கொலை செய்த பெண்

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (வயது: 61) என்பவர் தங்கியிருந்தார். அவர், அங்கிருந்த வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் அங்குள்ள மாத்தூர், மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி என்ற பிரின்சி (46) என்பவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு வீராசாமிக்குத் திருமணம் மீறிய உறவு எற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வீராசாமி, செல்வியிடம், தான் தனியாக தங்கியிருப்பதாகவும் தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட செல்வி, 'எனக்கும் கணவர் இல்லை. வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறேன். மத்த ஆள் எதற்கு... ந...

ஈரோடு சீனாபுரத்தில் 24×7 மது விற்பனை..! போலி மதுபானத்தால் குடிமகன்கள் அச்சம்..!! டாஸ்மாக் பார் உரிமையாளர் பிரகாஷுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள்..!

 மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி பதவியேற்றுடன் சில நாட்களுக்கு ஈரோட்டில் மதுக்கடைகள் விற்பனை கட்டுக்குள் இருந்தது . ஆனால் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 24×7 நேரமும் மது விற்பனை தாராளம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக  போலி மதுபானங்கள் அதிகளவு விற்பனைக்கு வருகிறது,  டாஸ்மார்க் கடைகள் வேலை நேரம் ஆன மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடையில் வாங்கும் மதுபான சரக்கை தவிர.  பார்களில் இல்லிகளாக வழங்கப்படும் மதுபான கட்டிங் பெரும்பாலும் போலி மதுபானம் ஆகும்  இதனை அருந்தும் குடிமகன்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.   அமைச்சர் முத்துசாமி மது குடிப்போரே குறைக்கவும், மது விற்பனையை குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார் . ஆனால் தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் அமைச்சரின் உத்தரவை  மதிக்காத அதிகாரிகள் மெத்தனமாக மாமூல் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். மது விற்பனை குறித்து புகார் அளித்தால் அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்படும் என காவல்துறைகள் மிரட்டி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட...

ஒற்றுமைக்கு அடிதளமிட்ட பத்திரிகை ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்.

 தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சஙகம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் 31.08.2023 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். துறைச் சார்ந்த ஆலோசனைகள், கருத்து பரிமாற்றம், உரிமைகள், சலுகைகள், கடமைகள், கோரிக்கைகள், ஒற்றுமையின் அவசியம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டது, நமது ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்பெறவும், நமது ஒற்றுமைக்கு அடிதளமிட்டது இந்த கூட்டம். பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை அனைவரின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும். நிகழ்சியின் முன்னதாக சமீபத்தில் மறைந்த பத்திரிகையாளர்கள் திரு.துரை பாரதி, முரசொலி துணை ஆசிரியர் திரு.முரசொலி ராஜா, திராவிடர் குரல் ஆசிரியர் திரு.சோ.பழனியப்பன், நமது நாடு ஆசிரியர் திரு.நவீன் பிரபாகர், தாமரை இதழ் ஆசிரியர் திரு.சேகர், மக்கள் கட்டளை ஆசிரியர் திரு.பாக்யராஜ், விடியும் நேரம் ஆசிரியர் திரு.தாமஸ், மூத்த பத்திரிகையாளர் திரு.இராமஜெயம், ஈ டிவி செய்தியாளர் திரு.லெனின், புதிய தலைமுறை...

முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் தலைவரும், மக்கள் விருப்பம் ஆசிரியருமான D.M.தருமராஜா

 சாமரிட்டன் முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை  கொண்டாடிய,  ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் -  தமிழ்நாடு, நிர்வாகிகள். ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் -  தமிழ்நாடு,  மாநில தலைவரும்,  மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான D.M.தருமராஜா D, Astro அவர்களின்  பிறந்த நாள் நிகழ்ச்சி 24/08/2023 அன்று சென்னை -  பல்லாவரத்தில் இயங்கும் சாமரிட்டன்  முதியோர் கருணை இல்லத்தில் நடைபெற்றது,அங்குள்ள முதியோர்கள்  மற்றும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கினார் தருமராஜா,நிகழ்ச்சியில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு,  மாநில செயற்குழு உறுப்பினர் S.முரளி D, Pharm, மனிதநேயம் பத்திரிகை ஆசிரியர் ராஜேஷ்,  தென்சென்னை மாவட்ட  ஆலோசகரும்,  உதவிக்கரம் பத்திரிகை உதவிய ஆசிரியர் எம்.பி.நந்தகுமார் BA, தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA,  திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் P.பிரகாசம் BE,  செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, அமைப்பாளர் N.யேசுகும...

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு..!

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் கொளத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் திறந்து வைத்து அக்கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது,  தொடர்ந்து 19 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு 20 நாளான ராகுல் காந்தி பிறந்தநாளன்று பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர் இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் 64வது ஏ வட்டத் தலைவர் வேலு மற்றும் ஒன்றாவது சறுக்கல் தலைவர் முரளி  ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர் இதில் சிறப்பு  நிகழ்வாக ராகுல் காந்தி பெயரில் குமரன் நகர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வீட்டு மனை பட்டா , அடிப்படை வசதி வேண்டி குன்னூர் வருவாய் கோட்டாட்சியரிடம் நஞ்சபுரசத்திரம் கிராம மக்கள் கோரிக்கை...!

ஜூன் 23  நீலகிரி மாவட்டம்  குன்னுர் வட்டத்தில்  நடைபெற்ற 1432 அது வருவாய் தீர்வாயம் ஜமாபந்தியில் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடாமட்டம் பகுதிக்கு சாலை வசதி வேண்டியும் நஞ்சபுரசத்திரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி. நஞ்சபுரசத்திரம் காட்டேரி பூங்கா அரசு விதை பண்ணை மக்களுக்கு சரியான குடிநீர் வணங்குவது சம்பந்தமாகவும் குன்னூர்  வருவாய் கோட்டாட்சியரிடம் இடம் மணு கொடுக்கப்பட்டது   மனு சம்பந்தமாக  பிரச்சனையை கூடிய விரைவில் சரி செய்த தரப்படும் என்று கோட்டாட்சியர்  மற்றும் தாசில்தார்  உறுதி அளித்தனர். செய்தியாளர் பிரபு 

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம்.

  சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்திற்குட்பட்ட காரம்பாக்த்திலுள்ள கங்கை அம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து இலவச முகாமை நடத்தினர்.   இந்நிகழ்வில்  முதலாவதாக மாநகராட்சி 198 வது மாமன்ற உறுப்பினரும்   பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லியோ என்.சுந்தரம், தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் மாநிலத் தலைவர் ஸ்ரீதர்,  மாநில பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா, மாநில துணை தலைவர் மாலை முரசு அகமதுஅலி, மாநில அமைப்பு செயலாளர் அரசுமலர் பாலமுருகன், மாநில செய்தி தொடர்பாளர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ், அலுவலக செயலாளர் கொளத்தூர் நண்பன் சக்தி மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மதன் கோபால், முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் லயன்ஸ் அன்பழகன், மகி என்கிற பழனி, கார்த்திக், அன்பரசு, மோகன், அவர்களுடன்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தென் சென்னை மாவட்ட தலைவர்  D.செல்வா ஏற்பாட்டில் நட...

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்பல்லோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

  \சென்னை சோழிங்கநல்லூர் காரப்பாக்கம்,  கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்பல்லோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய,  மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, சங்கத் தலைவர் ஸ்ரீதர், பொதுச் செயலாளர் சத்யா, தலைமை தாங்கினர்.. பொருளாளர் அய்யாவு சந்திரன், துணைத் தலைவர் அகமது அலி, இணை செயலாளர்கள் சந்திரசேகரன், கார்த்திகேயன்,  அமைப்புச் செயலாளர் பாலமுருகன்,  சட்ட ஆலோசகர் தினகரன், வடசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்,  சிறப்பு விருந்தினராக சங்க கவுரவ தலைவர் ஜெயராமன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் அரவிந்த் ரமேஷ், அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவ முகாம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்,.  மேலும் வட்ட செயலாளர் உமாபதி, தேவகுமார், சாமிநாதன், பெருமாள், முருகன், சம்பத், வென்ராஜ், கடும்பாடி சதீஸ், ராஜேஷ், ராகவன், மனோஜ், தங்கராஜ், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார்,...

எமன் ஏரிக்கு எமனாக மாறிய வருவாய்த்துறை..

....எமன் ஏரிக்கு எமனாக மாறிய வருவாய்த்துறை.... அதிகாரிகளின் அலட்சியத்தால் பன்றி  மேயும் இடமாக மாறிய பரிதாபம்..... அரியலூர் மாவட்டம் தா.பழூரில் எமன் ஏரி,வண்ணான் ஏரி, ஐயனார் குளம்,குட்டிக்கதை ஏரி,கொக்கிராம்பள்ளம் ஏரி போன்ற ஏரிகள் நிலத்தடி நீர் ஆதாரங்களாக விளங்கின. கடந்த 1982..83 வரையான காலம் வரை இந்த ஏரிகளில் நீர் நிறைந்து காணப்பட்டது. எமன் ஏரிக்கரையில் வரிசையாக புளிய மரங்கள் இருந்தன. வாலிப வயதினர் அந்த புளிய மரக்கிளைகளில் ஏறி நீர் ததும்பி நின்ற எமன் ஏரிக்குள் டைவ் அடித்தனர்... ஐயனார் குளம் என்பது பெயருக்கு ஏற்ப பக்தி பரவச இடமாக இருந்தது. இந்த ஏரியில் தாமரை பூக்கள் அதிகளவில் பூக்கும் என்பதால் ஏலம் கேட்கும் முறையும் அந்த காலத்தில் உண்டு. வண்ணான் ஏரி என்பது...எமன் ஏரி நிரம்பினால் தெற்கு பகுதி வாய்க்கால் வழியாக டாக்டர் சீனிவாசன் வீடு அருகே இருந்த செங்கற்களால் கட்டப்பட்ட நீர் ஒழுங்கி வழியாக ஐயனார் களத்துக்கு நீர் வந்து அந்த குளம் நிரம்பும். குளம் நிரம்பினால் சுத்தமல்லி..சாலை நீர் ஒழுங்கி வாயிலாக தண்ணீர் ஆனது வண்ணான் ஏரிக்கு செல்லும். அந்த ஏரி நிரம்பினால் சிந்தாமணி என்ற இடத்தில் அமைக்கப்ப...

தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட வி.ஏ.ஓ

"வட போச்சே" தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட வி.ஏ.ஓ அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியாற்றும் வகையில் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட ஓட்டு வில்லை கட்டிடம் உள்ளது. அந்த காலகட்டத்தில் இந்த கட்டடத்துக்கு சாவடி என்று பெயர். இதில் கிராம நிர்வாக அலுவலர் பணியாற்றுவார். விசாரிப்பு என்று அழைக்கப்படும் தலையாரி என்பவரும் பணியாற்றுவார். அந்த காலகட்டத்தில் கால்நடைகள் அடுத்தவர் நிலத்தில் அல்லது இடத்தில் நுழைந்து விட்டால் அந்த கால்நடைகளை பவுண்டு என்று அழைக்கப்பட்ட கால்நடை பட்டி என்ற இடத்தில் அடைப்பார்கள்.இந்த பணிக்கு வி.ஏ.ஓ பொறுப்பு. ஊரில் ஜாதி, வருவாய்,இருப்பிட சான்றிதழ் வழங்குதல் கல்லூரி, பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ போன்ற படிப்புகளுக்கு சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முக்கிய பணியாக இருந்தது. கூடவே முதியோர் பென்ஷன், இயற்கை பேரிடர் பணிகளும் அவர்களுக்கு இருந்தன. அந்த வகையில் தா.பழூர் சிவன்கோயில் முட்டுச்சந்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாவடி அமைக்கப்பட்டது. சாதாரண ஓட்டு கட்டிடத்தில் ஒரு மேசையில்  வி.ஏ.ஓ எதிர் மேசையில் ஆர்.ஐ எனப்படும் வ...

தமிழ்நாடு செய்தித்துறையினர் திருப்பூர் மாவட்ட தலைவர் கராத்தே மணி திருப்பூர் குருவாயூரப்பன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றினார்.

  75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர்  குருவாயூரப்பன் நகர் 108 வீடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசியக்கொடி ஏற்றும் விழா... மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழ்நாடு செய்தித்துறையினர் திருப்பூர் மாவட்ட தலைவர் திரு கராத்தே மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம்இந்த நிகழ்ச்சியில் 500 குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன்  திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன் இதில் காகிதபூ உதவி ஆசிரியர் மருதமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலவொளி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

  பாரத தேசத்தின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மப்பேடு அடுத்த சத்தரை என்னும் ஊராட்சி  ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் திருமதி.டாக்டர். கே.புனித வள்ளி நிறுவனத் தலைவர் மற்றும் திரு.ஜெ. கோபால் துணைத் தலைவர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் இயற்கை வளம் பெற நிலவொளி டிரஸ்ட் சார்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் திருப்பூர் மாவட்டம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

 மாநிலத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டத் தலைவர் கராத்தே மணி மற்றும் மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமையில் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றம் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரஸ் அசோசியன் ஆஃப் இந்தியா மாநில தலைவர் மற்றும் அம்மா எக்ஸ்பிரஸ் தினசரி மாலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ரகுமான் அவர்கள் மற்றும் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் அவர்கள் பங்கேற்றார்கள். மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார், மாவட்ட துணைச் செயலாளர் மகாராஜா , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்கள்.தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கத்திற்கு காரணமான நிர்வாகி மருதமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினர் ரகுமான் அவர்களை சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக வரவேற்றார். அம்மா எக்ஸ்பிரஸ் தினசரி மாலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ரகுமான் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு நலத்திட்டம் மற்றும் இனிப்பு வழங்கி விழாவினை சி...

எம்மதமும், சம்மதம் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில், 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது..

 எம்மதமும், சம்மதம் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில், ஓட்டேரி பவானி எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில், 75 ஆம் ஆண்டு, சுதந்திர தின விழா, கொண்டாடப்பட்டது..  இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின் தலைவர் s.ஸ்ரீதர், மற்றும் பொதுச் செயலாளர் V.சத்யா, கலந்து கொண்டு, தேசிய கோடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அறக்கட்டளையின் மாநிலத் தலைவி பத்மினி, தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நிறுவனத் தலைவர் சையத் அலாவுதீன் சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் சாய்தா, துணைச் செயலாளர் ஜெனிபர், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயக்குமார், இளைஞர் அணி மாநில தலைவர் திலீப் குமார், மற்றும் அறக்கட்டளை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும் பேனாவையும் வழங்கி சுதந்திர தின விழாவை  கொண்டாடினர். இறுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.