அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(43). சவுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பானுமதி(35), மகன்கள் பிரசாத்(13), சாத்விக்(2), மகள் சாத்விகா(2). இதில்,சாத்விக், சாத்விகா ஆகியோர் இரட்டையராகப் பிறந்தவர்கள். இந்நிலையில், ராஜாவின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மீன்சுருட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பானுமதியும், பிரசாத், சாத்விக், சாத்விகா ஆகியோர் தரையிலும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப்பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், உயிரிழந்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம், குழந்தைகள் 3 பேரையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் எஸ்.பி. செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 615 உதவி ஆய்வாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த இந்த துறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றி வரும் 16 ஆயிரத்து 11 காவலர்கள் கலந்துகொண்டு போட்டியின்றி எழுத்து தேர்வு உடல் திறன் தேர்வு நேர்முகத் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது கடந்த மாதம் 30 -ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் நான்கு காவலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் அஜித்குமார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சுரேஷ்.5-வது இடத்தை வென்றார். மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆயுதப்படையில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் கனிராஜா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் சப்இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்...