Skip to main content

தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட வி.ஏ.ஓ

"வட போச்சே"


தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட வி.ஏ.ஓ

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியாற்றும் வகையில் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட ஓட்டு வில்லை கட்டிடம் உள்ளது.

அந்த காலகட்டத்தில் இந்த கட்டடத்துக்கு சாவடி என்று பெயர்.

இதில் கிராம நிர்வாக அலுவலர் பணியாற்றுவார்.

விசாரிப்பு என்று அழைக்கப்படும் தலையாரி என்பவரும் பணியாற்றுவார்.

அந்த காலகட்டத்தில் கால்நடைகள் அடுத்தவர் நிலத்தில் அல்லது இடத்தில் நுழைந்து விட்டால் அந்த கால்நடைகளை பவுண்டு என்று அழைக்கப்பட்ட கால்நடை பட்டி என்ற இடத்தில் அடைப்பார்கள்.இந்த பணிக்கு வி.ஏ.ஓ பொறுப்பு.

ஊரில் ஜாதி, வருவாய்,இருப்பிட சான்றிதழ் வழங்குதல் கல்லூரி, பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ போன்ற படிப்புகளுக்கு சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முக்கிய பணியாக இருந்தது.

கூடவே முதியோர் பென்ஷன், இயற்கை பேரிடர் பணிகளும் அவர்களுக்கு இருந்தன.

அந்த வகையில் தா.பழூர் சிவன்கோயில் முட்டுச்சந்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாவடி அமைக்கப்பட்டது.

சாதாரண ஓட்டு கட்டிடத்தில் ஒரு மேசையில்  வி.ஏ.ஓ எதிர் மேசையில் ஆர்.ஐ எனப்படும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியாற்றினர்.

இந்த கட்டடம் கடந்த 50ஆண்டுகளாக இயங்கியது.

சமீப காலமாக இந்த ஓட்டு கட்டடம் மிக மிக பழுதான தால் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

கிராம நிர்வாக அலுவலராக சிவக்குமார் என்பவர் துணிச்சலாக இந்த ஓட்டை உடைசல் கட்டடத்தில் பணியாற்றினார்.

ஆனால் அதன் பிறகு அங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தகவல் அறிந்த தமிழக அரசு, வருவாய் ஆய்வாளருக்கு தா.பழூர்---சுத்தமல்லி சாலையில் ஒயின் ஷாப் அருகே புதிய ஆர்.ஐ அலுவலகத்தை கட்டியது.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஆர்.ஐ அலுவலகம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வளாகம் என்று பெயரிடப்பட்ட கக்கூஸ் ஆகியவை திறக்கப்பட்டன.

மிக அருகில் ஒயின் ஷாப்கள் இரண்டு இருந்ததால் குடிமக்கள் தங்கள் வளாகமாக இவற்றை பயன்படுத்தினர்.

எங்கு பார்த்தாலும் பாட்டில், தண்ணீர் கப்,என்று அரசு வளாகம் பாழ்பட்டது.

சுகாதார வளாகத்தில் போதிய நீர் வசதி இல்லாததாலும் குடிமகன்களின் சேட்டையாலும் வளாகம் இயங்க முடியாத சூழ்நிலைக்கு சென்றது.

தினமும் பாட்டில்கள் மலக்கழிவுகள் மத்தியில் பணியாற்றுவதை விட ஓட்டு கட்டடம் மேல் என்று முடிவு செய்த அப்போதைய ஆர்.ஐ ,புதிய வளாகத்தை புறக்கணித்தார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் பன்றியை நெருப்பில் வேக வைத்து இறைச்சி விற்பனை செய்ததாலும் இந்த புதிய கட்டடம் புறக்கணிக்கப்பட்டது.

வேறு வழியில்லாமல் தமிழக அரசு சார்பில் அரசமரத்தடி பிள்ளையார் கோயில் தெருவில் புதிய ஆர்.ஐ அலுவலகம் அவர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு ஆர்.ஐ தனிக்குடித்தனம் சென்றார்.

வி.ஏ‌.ஓ வழக்கம் போல ஓட்டு கட்டிடத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பணியாற்றினார்.

இந்த நிலையில் சிவக்குமார் என்ற வி.ஏ.ஓவுக்கு பதிலாக முட்டுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தா.பழூர் வி.ஏ.ஓ ஆக பொறுப்பேற்றார்.

ஓட்டு கட்டிடத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ஓடுகளை பார்த்த இவர் உயிருக்கு பயந்தார்

அப்போது பயன்பாடுகள் இல்லாமல் கிடக்கும் பழைய ஆர்.ஐ அலுவலக கட்டிடம் குறித்த தகவல் அறிந்தார்.

அந்த கட்டடத்தை பார்வையிட்ட அவர் அதிர்ந்தார்.

எங்கு திரும்பினாலும் ஒயின் ஷாப் பாட்டில்கள் சரக்கு சார்ந்த கழிவுகள்,மூக்கை துளைக்கும் தண்ணீரே இல்லாத கக்கூஸ் வளாகம்...

இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்த அவர்,தொடர் மழை ஏற்பட்டதாலும் உரிய அனுமதி கிடைத்ததாலும் 50ஆண்டு பாரம்பரிய மிக்க சாவடி என்ற இடத்தில் இருந்து வி.ஏ.ஓ..அலுவலகத்தை ஒயின் ஷாப் அருகே உள்ள புறக்கணிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றம் செய்ய முடிவு செய்தார்.

ஆனால் அந்த கட்டடம் பாழடைந்து கக்கூஸ் நறுமணத்தோடு இருந்ததால் வெறுத்து போனார்.

தனக்கு உட்கார நாற்காலிகள் வேண்டும் என்ற நிலையில் கை விடப்பட்ட கட்டடத்துக்கு கம்பி வேலி அமைத்தல், பிளம்பிங் ஒர்க், எலக்ட்ரிக் ஒர்க்ஸ்

,பூச்சு வேலைகள் என்று சொந்த செலவில் மேற்கொண்டார்.

கைவிடப்பட்ட வளாகத்துக்கு வண்ணம் தீட்டி வி.எ.ஓ அலுவலகம் மற்றும் குடியிருப்பு என்று பெயர் பதிவு செய்து சில நாட்கள் பணியாற்றினார்.

திடீரென்று ஒரு ஓலை...தங்களை கோடாலிகருப்பூர் பகுதி வி.எ.ஓ ஆக மாற்றி உள்ளோம் என்றது அரசு உத்தரவு.

நொந்து போன ஐயப்பன், சொந்த காசில் 50ஆயிரம் வரை செலவு செய்து அலுவலகமாக உருவாக்கினேன்...வட...போச்சே...என்ற புலம்பலோடு இன்று5ம்தேதி திங்கள் கிழமை கோடாலி கருப்பூர் வி.எ.ஓ ஆக பொறுப்பேற்கிறார்.







உள்குத்து..

இதில் என்ன காமெடி என்றால்...

ஐயப்பனுக்கு பதிலாக புதிய வி.எ.ஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் பெயர் ஆனந்த்... ஆனால் இவருக்கு வேலை வாங்க வழி சொன்னவரே

 இந்த ஐயப்பன் தான்..

பிறகு எப்படி :

அரியலூர் மாவட்டம் தா.பழூர் என்பது வருவாய் துறையினருக்கு வளம் கொழிக்கும் பகுதி..‌

ஒரு நாளைக்கு 400சான்றிதழ்களில் வி‌.ஏ.ஓ..கையெழுத்து போடும் பகுதி...

ஒரு கையெழுத்துக்கு அல்பத்தனமாக 100ரூபாய் என்றாலும் கல்லா எங்கோ போகும்.

இது தவிர ஏரிகளில் மண் சுரண்டல்,தீ விபத்து சாலை விபத்து,அனாதை பிணம்,முதியோர் பென்ஷன் என்று தா.பழூரில் காசு கொட்டும் என்பதால் இந்த ஊருக்கு பல லட்சத்தை கொட்டி வந்த அதிகாரிகளும் உள்ளனர்.

அதே வகையில்தான் ஆனந்த் என்பவரும் தா.பழூரை பிடித்தார்.

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணண் என்பவருக்கு நெருக்கமான...மிக நெருருருருக்கமான ஆனந்த், கைவிடப்பட்ட வளாகத்தில் வி.ஏ.ஓ அலுவலகம் தொடர்பாக போட்டு கொடுக்க ஐயப்பன் காலி...ஆனந்த் ஜாலி...




கிளைமாக்ஸ்

செப்..1ம் தேதி பணிக்கு சென்ற வி.ஏ.ஓ ஐயப்பனுக்கு அரசல் புரசலாக தகவல்கள் தெரிந்து விட்டன.

கடுப்பான அவர் சொந்த காசு 50ஆயிரம்  செலவு செய்து குடிமகன்கள் வராமல் இருக்க வேலி போட்டேன்...ஒயிட் வாஷ், பெயிண்ட் செய்தேன்..‌மின் இணைப்பு,குடிநீர் இணைப்பு சரி செய்தேன்...அலுவலக முகப்பில் மண் அடித்து சரி செய்து இதுதான் வி.ஏ.ஓ அலுவலகம் என்பதை சரி செய்தேன்...ஆனால் எனக்கே அல்வா.  என்று புலம்பியதோடு தன் சொந்த காசில் வாங்கி போட்ட மேசை, கம்ப்யூட்டர் டேபிள்,சிவப்பு நிற நாற்காலிகள் 12, குடிதண்ணீர் கேன் என்று தன் செலவில் இருந்த பொருட்கள் அனைத்தையும் விளக்குமாறு உட்பட எடுத்துக்கொண்டு.....

வட..போச்சே என்று நடையை கட்டினார்...

இன்று செப் 5ம் தேதி வரும் ஆனந்த்...பழைய பிரிட்டிஷ் மர நாற்காலிகளில் அமர வேண்டும்....‌

இது எப்படி இருக்கு...


ச.சட்டநாதன் அரியலூர்.

Comments

Popular posts from this blog

ஒற்றுமைக்கு அடிதளமிட்ட பத்திரிகை ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்.

 தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சஙகம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் 31.08.2023 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். துறைச் சார்ந்த ஆலோசனைகள், கருத்து பரிமாற்றம், உரிமைகள், சலுகைகள், கடமைகள், கோரிக்கைகள், ஒற்றுமையின் அவசியம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டது, நமது ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்பெறவும், நமது ஒற்றுமைக்கு அடிதளமிட்டது இந்த கூட்டம். பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை அனைவரின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும். நிகழ்சியின் முன்னதாக சமீபத்தில் மறைந்த பத்திரிகையாளர்கள் திரு.துரை பாரதி, முரசொலி துணை ஆசிரியர் திரு.முரசொலி ராஜா, திராவிடர் குரல் ஆசிரியர் திரு.சோ.பழனியப்பன், நமது நாடு ஆசிரியர் திரு.நவீன் பிரபாகர், தாமரை இதழ் ஆசிரியர் திரு.சேகர், மக்கள் கட்டளை ஆசிரியர் திரு.பாக்யராஜ், விடியும் நேரம் ஆசிரியர் திரு.தாமஸ், மூத்த பத்திரிகையாளர் திரு.இராமஜெயம், ஈ டிவி செய்தியாளர் திரு.லெனின், புதிய தலைமுறை...

மத போதகர் கொடுத்த அதிகமான பாலியல் தொல்லை - பொறுக்கமுடியாமல் கொலை செய்த பெண்

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (வயது: 61) என்பவர் தங்கியிருந்தார். அவர், அங்கிருந்த வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் அங்குள்ள மாத்தூர், மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி என்ற பிரின்சி (46) என்பவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு வீராசாமிக்குத் திருமணம் மீறிய உறவு எற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வீராசாமி, செல்வியிடம், தான் தனியாக தங்கியிருப்பதாகவும் தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட செல்வி, 'எனக்கும் கணவர் இல்லை. வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறேன். மத்த ஆள் எதற்கு... ந...

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு..!

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் கொளத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் திறந்து வைத்து அக்கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது,  தொடர்ந்து 19 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு 20 நாளான ராகுல் காந்தி பிறந்தநாளன்று பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர் இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் 64வது ஏ வட்டத் தலைவர் வேலு மற்றும் ஒன்றாவது சறுக்கல் தலைவர் முரளி  ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர் இதில் சிறப்பு  நிகழ்வாக ராகுல் காந்தி பெயரில் குமரன் நகர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம்.

  சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்திற்குட்பட்ட காரம்பாக்த்திலுள்ள கங்கை அம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மற்றும் செட்டிநாடு பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து இலவச முகாமை நடத்தினர்.   இந்நிகழ்வில்  முதலாவதாக மாநகராட்சி 198 வது மாமன்ற உறுப்பினரும்   பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் துணைத் தலைவர் லியோ என்.சுந்தரம், தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் மாநிலத் தலைவர் ஸ்ரீதர்,  மாநில பொதுச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா, மாநில துணை தலைவர் மாலை முரசு அகமதுஅலி, மாநில அமைப்பு செயலாளர் அரசுமலர் பாலமுருகன், மாநில செய்தி தொடர்பாளர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ், அலுவலக செயலாளர் கொளத்தூர் நண்பன் சக்தி மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மதன் கோபால், முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன், வணிகர் சங்க முன்னாள் செயலாளர் லயன்ஸ் அன்பழகன், மகி என்கிற பழனி, கார்த்திக், அன்பரசு, மோகன், அவர்களுடன்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தென் சென்னை மாவட்ட தலைவர்  D.செல்வா ஏற்பாட்டில் நட...

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்பல்லோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

  \சென்னை சோழிங்கநல்லூர் காரப்பாக்கம்,  கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கம் மற்றும் அப்பல்லோ, கியூரி, செட்டிநாடு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய,  மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, சங்கத் தலைவர் ஸ்ரீதர், பொதுச் செயலாளர் சத்யா, தலைமை தாங்கினர்.. பொருளாளர் அய்யாவு சந்திரன், துணைத் தலைவர் அகமது அலி, இணை செயலாளர்கள் சந்திரசேகரன், கார்த்திகேயன்,  அமைப்புச் செயலாளர் பாலமுருகன்,  சட்ட ஆலோசகர் தினகரன், வடசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்,  சிறப்பு விருந்தினராக சங்க கவுரவ தலைவர் ஜெயராமன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் அரவிந்த் ரமேஷ், அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவ முகாம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்,.  மேலும் வட்ட செயலாளர் உமாபதி, தேவகுமார், சாமிநாதன், பெருமாள், முருகன், சம்பத், வென்ராஜ், கடும்பாடி சதீஸ், ராஜேஷ், ராகவன், மனோஜ், தங்கராஜ், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார்,...

வீட்டு மனை பட்டா , அடிப்படை வசதி வேண்டி குன்னூர் வருவாய் கோட்டாட்சியரிடம் நஞ்சபுரசத்திரம் கிராம மக்கள் கோரிக்கை...!

ஜூன் 23  நீலகிரி மாவட்டம்  குன்னுர் வட்டத்தில்  நடைபெற்ற 1432 அது வருவாய் தீர்வாயம் ஜமாபந்தியில் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடாமட்டம் பகுதிக்கு சாலை வசதி வேண்டியும் நஞ்சபுரசத்திரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி. நஞ்சபுரசத்திரம் காட்டேரி பூங்கா அரசு விதை பண்ணை மக்களுக்கு சரியான குடிநீர் வணங்குவது சம்பந்தமாகவும் குன்னூர்  வருவாய் கோட்டாட்சியரிடம் இடம் மணு கொடுக்கப்பட்டது   மனு சம்பந்தமாக  பிரச்சனையை கூடிய விரைவில் சரி செய்த தரப்படும் என்று கோட்டாட்சியர்  மற்றும் தாசில்தார்  உறுதி அளித்தனர். செய்தியாளர் பிரபு 

ஈரோடு சீனாபுரத்தில் 24×7 மது விற்பனை..! போலி மதுபானத்தால் குடிமகன்கள் அச்சம்..!! டாஸ்மாக் பார் உரிமையாளர் பிரகாஷுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள்..!

 மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி பதவியேற்றுடன் சில நாட்களுக்கு ஈரோட்டில் மதுக்கடைகள் விற்பனை கட்டுக்குள் இருந்தது . ஆனால் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 24×7 நேரமும் மது விற்பனை தாராளம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக  போலி மதுபானங்கள் அதிகளவு விற்பனைக்கு வருகிறது,  டாஸ்மார்க் கடைகள் வேலை நேரம் ஆன மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடையில் வாங்கும் மதுபான சரக்கை தவிர.  பார்களில் இல்லிகளாக வழங்கப்படும் மதுபான கட்டிங் பெரும்பாலும் போலி மதுபானம் ஆகும்  இதனை அருந்தும் குடிமகன்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.   அமைச்சர் முத்துசாமி மது குடிப்போரே குறைக்கவும், மது விற்பனையை குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார் . ஆனால் தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் அமைச்சரின் உத்தரவை  மதிக்காத அதிகாரிகள் மெத்தனமாக மாமூல் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். மது விற்பனை குறித்து புகார் அளித்தால் அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்படும் என காவல்துறைகள் மிரட்டி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட...

திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றும் 4 காவலர்கள் உதவி ஆய்வாளர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 615 உதவி ஆய்வாளர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டது.  இந்த இந்த துறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையில் பணியாற்றி வரும் 16 ஆயிரத்து 11 காவலர்கள் கலந்துகொண்டு போட்டியின்றி எழுத்து தேர்வு உடல் திறன் தேர்வு நேர்முகத் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது கடந்த மாதம் 30 -ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் நான்கு காவலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் அஜித்குமார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் சுரேஷ்.5-வது இடத்தை வென்றார். மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் முதல் நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆயுதப்படையில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் கனிராஜா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் சப்இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்...

அரியலூரில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்பு..!

 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(43). சவுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பானுமதி(35), மகன்கள் பிரசாத்(13), சாத்விக்(2), மகள் சாத்விகா(2). இதில்,சாத்விக், சாத்விகா ஆகியோர் இரட்டையராகப் பிறந்தவர்கள். இந்நிலையில், ராஜாவின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மீன்சுருட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பானுமதியும், பிரசாத், சாத்விக், சாத்விகா ஆகியோர் தரையிலும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப்பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், உயிரிழந்து 4 நாட்கள் ஆகியிருக்கலாம், குழந்தைகள் 3 பேரையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் எஸ்.பி. செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்

முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் தலைவரும், மக்கள் விருப்பம் ஆசிரியருமான D.M.தருமராஜா

 சாமரிட்டன் முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை  கொண்டாடிய,  ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் -  தமிழ்நாடு, நிர்வாகிகள். ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் -  தமிழ்நாடு,  மாநில தலைவரும்,  மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான D.M.தருமராஜா D, Astro அவர்களின்  பிறந்த நாள் நிகழ்ச்சி 24/08/2023 அன்று சென்னை -  பல்லாவரத்தில் இயங்கும் சாமரிட்டன்  முதியோர் கருணை இல்லத்தில் நடைபெற்றது,அங்குள்ள முதியோர்கள்  மற்றும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கினார் தருமராஜா,நிகழ்ச்சியில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு,  மாநில செயற்குழு உறுப்பினர் S.முரளி D, Pharm, மனிதநேயம் பத்திரிகை ஆசிரியர் ராஜேஷ்,  தென்சென்னை மாவட்ட  ஆலோசகரும்,  உதவிக்கரம் பத்திரிகை உதவிய ஆசிரியர் எம்.பி.நந்தகுமார் BA, தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA,  திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் P.பிரகாசம் BE,  செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, அமைப்பாளர் N.யேசுகும...